கொடைக்கானலில் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு நிறைவு…

கொடைக்கானலில் ’ஜனநாயகன்’ திரைப்பட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தவெக தலைவரும், நடிகருமான விஜய் மதுரை வழியாக சென்னை திரும்பினார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ’ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கொடைக்கானல் அருகேயுள்ள தண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த மே 1-ம் தேதி விஜய் மற்றும் படக்குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
#JanaNayagan Kodaikanal shoot complete! 🎬✨ #ThalapathyVijay returns to Chennai in style! 😎🔥
— TamilCineX (@TamilCineX) May 5, 2025
#PoojaHegde #BobbyDeol #HVinoth #AnirudhRavichander #KVNProductions #JanaNayaganPongal2026 pic.twitter.com/8lFYf62Cxq
படப்பிடிப்பிற்கு இடையே விஜய் திறந்த வேனில் மலை கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்தார். இந்நிலையில், கொடைக்கானலில் ’ஜனநாயகன்’ படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து விஜய் அங்கிருந்து கார் மூலம் மதுரை புறப்பட்டார். அவரை மலை கிராம மக்கள் உற்சாகமாக வழியனுப்பினர். மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். இதற்கிடையே, கடந்த ஒன்றாம் தேதி மதுரைக்கு வருகை தந்த விஜயை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கூடியதாக த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது அவனியாபுரம் காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.