கிராமத்து நாயகனாகும் பொன்னியின் செல்வன்... ஜெயம் ரவியின் புதிய பட அப்டேட் !

jayam ravi

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.‌

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோவான அவர், அடுத்தடுத்து சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டை பெற்றது. 

jayam ravi

இந்த படத்தையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அகிலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து இறைவன், சைரன் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்து ‘தனி ஒருவன் 2’, 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த முத்தையா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகிறது. இதனால் நீண்ட இடைவெளிக்கு நடிகர் ஜெயம் ரவி கிராமத்து நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story