‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தட்டி தூக்கிய ‘துல்கர் சல்மான்’.

photo

நடிகர் துல்கர் சல்மான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார்.

photo

கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்களான சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்த பாகத்திற்கு ஜிகர்தண்டா பபுள் எக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் நடிகர்களான ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளானர். வரும் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போதைய தகவலாக படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this story