அறம், ஒழுக்கம் பாலிவுட்டில் குறைவு! – பளிச் பேட்டி கொடுத்த காஜல் அகர்வால்.

photo

தமிழ், தெலுங்கு , இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தான் ஏன் தென்னிந்திய சினிமாவிற்கு நடிக்க வந்தேன்? என்பது குறித்து பளிச் பளிச் பதில் கொடுத்துள்ளார்.

photo

திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் அதீத கவனம் செலுத்திவருகிறார் காஜல். தற்போது  கமல்- ஷங்கர் கூட்டணியில் தயாராகிவரும்இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவதுஇந்தி தான்  எனது தாய்மொழி. இந்தி திரைப்படங்கள் பார்த்துதான் வளர்தேன். ஆனால்,தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு இந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை இந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணம் நாடு தழுவிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான் . இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

photo

Share this story