அப்டேட் கொடுத்த 'வாடிவாசல்' தயாரிப்பாளர்.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறு நாவலை தழுவி இப்படம் உருவாகவுள்ளது.
கடந்த ஆண்டு இப்படத்திற்கான ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் அருகே ஜல்லிக்கட்டு செட் அமைக்கட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தச் சூழலில் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
வாடிவாசல் படம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் கூறுகையில், "வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை சில நாட்கள் நடத்தினோம். ஆனால் உண்மையான காளைகளை வைத்து ஷூட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. அது மிகப்பெரிய ரிஸ்க்கும்கூட. எனவே CGயில் காளைகளை உருவாக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை நிறுத்தினோம். சூர்யாதான் ஹீரோ: விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு வெற்றிமாறன் வாடிவாசல் ஷூட்டிங்கை தொடங்குவார். சூர்யாதான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பார். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. கிராஃபிக்ஸ் வேலைகளால்தான் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிறது" என்றார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.