வேகமெடுக்கும் 'ஜிகர்தண்டா 2'... கார்த்திக் சுப்புராஜ் படத்தின் புதிய அப்டேட்

jigarthanda 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ஜிகர்தண்டா 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த கடந்த 2014-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் 'ஜிகர்தண்டா'. இந்த படத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா,  சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களையே நல்ல வரவேற்பு பெற்றது. 

jigarthanda 2

இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. 

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே‌.சூர்யா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை விரைவில் முடிக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.  இதையடுத்து படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. 

Share this story