மலைவாழ் மக்களுடன் படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்

மலைவாழ் மக்களுடன் படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் ஈட்டியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. படம் முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்பதாலும், இந்த படத்துக்கு போட்டியாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததாலும் ஜிகர்தண்டா படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி படம் இரண்டாவது  நாளில் 4.5 கோடியை வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. 

மலைவாழ் மக்களுடன் படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்

தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி, சிம்பு, உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா படத்தை மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார்.

Share this story