அப்பா - மகள் பாசம் பேசும் 'செவ்வந்தி பூ' பாடல்... 'கருமேகங்கள் கலைகின்றன' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

karumegangal Kalaiginrana

'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

kk

இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

kk

இந்நிலையில் ஜிவி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.‌ அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 'செவ்வந்தி பூ' என தொடங்கும் இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். சத்யபிரகாஷ் என்பவர் பாடியுள்ளார்.

 

Share this story