ஆர்யாவின் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியானது புதிய அப்டேட்

arya
 ஆர்யாவின் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

‘விருமன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். டெடி, கேப்டன் ஆகிய படங்களுக்கு பிறகு ஆர்யா இந்த படத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

arya

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளது. இந்த இரண்டு உரிமையையும் ஒரு பெரிய தொகைக்கு கைமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story