கல்யாணம், வீட்டுக்காரர் பற்றி மட்டும்தான் கேப்பீங்களா - கலாய்த்த கீர்த்தி பாண்டியன்

கல்யாணம், வீட்டுக்காரர் பற்றி மட்டும்தான் கேப்பீங்களா - கலாய்த்த கீர்த்தி பாண்டியன்

ஸ்கைமூன் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் இஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கண்ணகி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 4 பெண்களின் வாழ்கை காட்டப்படுகிறது அதில் கீர்த்தி பாண்டியன்- திருமணமாகாமல் கர்பமான கருவை கலைக்க முயல்கிறார். அடுத்து அம்மு அபிராமி –பல முறை மாப்பிள்ளை பார்த்தும் கைகூடாமல் விரக்தியில் உள்ளார். வித்யா பிரதீப்- கணவரின் வற்புறுத்தலால் விவாகரத்திற்கு செல்கிறார். இறுதியாக ஷாலின்- திருமணத்தை வெறுத்து லிவ்வின் வாழ்க்கையில் நாட்டம் கொள்கிறார். இப்படியாக நான்கு பெண்களின் வாழ்கை ஒரே கதையில் எமோஷனலாக காட்டியுள்ளார் இயக்குநர். இத்திரைப்படம் நாளை வௌியாகிறது.

கல்யாணம், வீட்டுக்காரர் பற்றி மட்டும்தான் கேப்பீங்களா - கலாய்த்த கீர்த்தி பாண்டியன்

இந்நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி பாண்டியன், எப்போது மைக்கை எடுத்தாலும், தன் கல்யாண வாழ்க்கை மற்றும் தன் கணவர் அசோக் செல்வன் பற்றியே கேள்விகள் கேட்பதாக அனைவரையும் கலாய்த்து பேசினார். மேலும், தான் கண்ணகி என்ற படத்தில் நடித்துள்ளேன், இந்த படம் குறித்தும் கேள்வி கேட்கலாம் எனவும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார். 


 

Share this story