‘மாமன்னன்’ படத்தில் பிடித்த காட்சி அதுதான் - நடிகை கீர்த்தி சுரேஷ் !

maamannan

வடிவேலு அழுத காட்சி தான் ‘மாமன்னன்’ படத்தில் எனக்கு பிடித்தக்காட்சி என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

maamannan

இந்த படம் 50வது நாளை கடந்து வெற்றிக்கரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னையில் 50வது நாள் வெற்றிக்கொண்டாட்ட விழா நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

maamannan

இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இருப்பதால் தான் இப்படிப்பட்ட படத்தில் நடிக்க முடிந்தது. முன்பெல்லாம் 100 நாள் படம் ஓடுவது பெரிதாக இருந்தது. ஆனால் தற்போது 50 நாள் ஒரு படம் ஓடுவது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு மலையில் நின்று அழுவதுதான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

 

Share this story