குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி, அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த ‘லெஜண்ட் சரவணன்’.

photo

சரவணன் அருள் ஒரு தொழில் அதிபர் என்பதை கடந்து  ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். தொழில்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கி வெற்றி நடைப்போட்டு வரும் இவர் இன்று 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் விழாவை  கொண்டாடி தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

photo

தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணன் அருள்.  அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா உடன் ஜோடிபோட்டு நடித்து ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் அண்ணாச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் 77வது சுதந்திரதினத்தை கொண்டாடி அவர்களுக்கு இனிப்புகள் பரிசுகளை வழங்கியுள்ளார். குழந்தைகளுடன் கலந்துரையாடி  அவர்களது சட்டையில் மூவர்ண கொடியை அணிவித்து மகிழ்ச்சியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

photo

அதுமட்டுமல்லாமல் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதாவது ‘ உங்களது அடுத்த படம் எப்போது?’ என சிறுவன் ஒருவன் கேட்க “ நல்ல கதைக்காக எவ்வளவு வேண்டுமாலும் காத்திருக்கலாம், இப்போ அப்படியான ஒரு கதை கிடச்சிருக்கு, அதனால் சீக்கிரமா படத்தை எடுக்கவேண்டியதுதான்” என பதிலளித்துள்ளார்.

photo

 

Share this story