“முதலில் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும்..”: நடிகர் விஷால் பேட்டி..

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில், விஷால் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சி கலந்துகொண்ட விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஷால், “மொழி திணிப்பு என்பதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதை கொண்டு வரமுடியாது.
மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி” என்றார். மேலும், சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் போல் மேலே கை காமித்து கடந்து சென்றார். தொடர்ந்து, “நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். அதன் பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம் என தெரிவித்தார்.