'எனக்கு கேப்-பே இல்லை' - வடிவேலு கலகல !
'தேவன் மகன்' படத்திற்கு பிறகு 'மாமன்னன்' எனக்கு முக்கியமான திரைப்படம் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வடிவேலு, நான் எங்கும் சென்று விடவில்லை. எல்லா நேரமும் உங்கள் செல்போனில் வந்து கொண்டே தான் இருக்கிறேன். எனக்கு கேப்பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்களால் நான் உங்களோடுதான் இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளையாக நான் நடித்துள்ளேன். இந்தப் படம் எல்லோர் வாழ்க்கையிலும் கனெக்ட்டாகும். அருமையான கதையை தேர்ந்தெடுத்து உதயநிதி நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையில் நான் பாடியுள்ளேன். நான் பாடவில்லை. ஏஆர் ரகுமான் தான் என்னை பாட வைத்தார்.

மறைந்த என்னுடைய தாயை நான் இந்ல நேரத்தில் நினைத்து பார்க்கிறேன். அருமையான கதைக்களம் கொண்ட படமாக மாமன்னன் உருவாகியுள்ளது. தேவர்மகன் படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய படம் இது. அரசியல் த்ரில்லர் கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள புதுமையான படமாக இப்படம் இருக்கும். சிறந்த குணச்சித்திர வேடத்தில் நான் நடித்துள்ளேன். சுயமரியாதை கலந்த படம் இது.
இந்த படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்ல முடியாது. இதனால் வரை சினிமாவில் ஹீரோவாக உள்ளார். தற்போது அரசியலில் மக்கள் பணியை செய்ய ஹீரோவாகியுள்ளார் என்று கூறினார்.

