கஞ்சா பயன்படுத்தியாக பிரபல மலையாள இயக்குனர்கள் கைது...

arrest

மலையாள இயக்குநர்களான காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் கஞ்சா பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைப்ரிட் கஞ்சாவுடன் இரண்டு பிரபல இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் கொச்சியில் கைது செய்யப்பட்டனர். இயக்குநர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா தவிர ஷாலிஃப் முகமது என்பவரும் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் எக்ஸைஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர். 1.6 கிராம் ஹைப்ரிட் கஞ்சா இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அளவு குறைவாக இருந்ததால் கைதுக்குப் பிறகு அவர்கள் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
 


 'ஆலப்புழா ஜிம்ஹானா', 'தள்ளுமால' படங்களை இயக்கியவர் காலித். 'தமாஷா', 'பீமனின் வழி' போன்ற படங்களை இயக்கியவர் அஷ்ரஃப் ஹம்சா. ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹைப்ரிட் கஞ்சா இளம் இயக்குநர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று எக்ஸைஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியதாக எர்ணாகுளம் எக்ஸைஸ் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரமோத் கே.பி. கூறினார்.


கஞ்சா பயன்படுத்தியதால் இளம் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story