'அருந்ததி' பட வாய்ப்பை தவறவிட்ட 'மகாராஜா' நடிகை

அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் அருந்ததி. இப்படம் நடிகை அனுஷ்காவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருந்ததி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொடி ராமகிருஷ்ணன் இயக்கிய அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மம்தா மோகன் தாஸ் தானாம். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழில் குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிடம் மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். தெலுங்கில் இவர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய யமடோங்கா திரைப்படத்தின் மூலமாகத்தான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு அருந்ததி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், கோடி ராமகிருஷ்ணன் முதன் முதலில் மம்தாவை தான் அணுகி கதை கூறியதாகவும் கூறப்படுகிறது.
அவரும் இப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டான நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களினால் படத்தில் இருந்து விலகி விட்டாதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மம்தா மோகன் தாஸ் தெரிவித்துள்ளார்.