செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்.
![PHOTO](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/46ca23fd4840b308a000d7d1759744b9.jpeg)
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு விமல் நடித்து தயாரித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’ இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். ஆனால் படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை விமல் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாததாக கூறி விமல் மீது தயாரிப்பாளர் கோபி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக விமல் ஆஜரான நிலையில் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் யாரும் முன்வரவில்லை. முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து, வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார். இதன்பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் விமல் செயல்பட்டதால் ரூபாய் 300 வழக்கு செலவு விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார், மேலும் வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.