மாரி செல்வராஜின் 'வாழை' படப்பிடிப்பு நிறைவு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !

vaazhai

மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை அடுத்து அதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

vaazhai

உதயநிதியின் 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாழை'. 1994-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. நான்கு சிறுவர்களை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

 vaazhai

இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நேவி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பை கடந்த நவம்பர் மாதம் நடிகர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த படப்பிடிப்பு முழுக்க முழுக்க கொங்கராயகுறிச்சி பகுதியிலேயே நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. இதை கேக் வெட்டி மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

 

Share this story