மார்க் ஆண்டனி பட விவகாரம்... சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

மார்க் ஆண்டனி பட விவகாரம்... சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி  வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் நிலையில், நடிகர் விஷால் சென்சார் போர்டு ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சமாக ரூ.6.5 லட்சம் கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறி பணம் செலுத்திய வங்கி விவரங்களை வௌியிட்டார் நடிகர் விஷால். இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் “ வெள்ளித்திரையில் லஞ்சம் குறித்து காட்டுவது பரவாயில்லை, ஆனால் நிஜ வாழ்கையில் அது சிறந்ததல்ல, மும்பை சென்சார் போர்டில் மோசமாக நடக்கிறது. மார்க் ஆண்டனி படத்திற்காக படத்தை திரையிட ரூ.3 லட்சமும், சான்றிதழ் பெற ரூ.3.5 லட்சமும் லஞ்சமாக கேட்டனர். இதனை மகாராஷ்டிரா முதலவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நான் உழைத்த பணம் ஊழலுக்கு செல்வதா?, எப்போதும் போல உண்மை வெல்லும்” என அவர் பதிவிட்டிருந்தார்.

மார்க் ஆண்டனி பட விவகாரம்... சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விஷாலிடம் இருந்து லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இந்நிலையில், விசாரணைக்காக நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் இருவரும் மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். அவர்கள் இருவரிடமும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. 


 

Share this story