விரைவில் ‘மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு.. சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து...!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சுந்தர்.சி நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Our very own thalaivar Superstar #Rajinikanth's 🔥 blessings & wishes for #MookuthiAmman2 ❤️🔥
— Vels Film International (@VelsFilmIntl) March 5, 2025
@IshariKGanesh @VelsFilmIntl#SundarC #Nayanthara @AvniCinemax_ @Rowdy_Pictures @ivyofficial2023 @RajaS_official @khushsundar @B4UMotionPics @SunilOfficial @Nitinsathyaa @linqmarqet pic.twitter.com/DUqfOleogl
இதனை வேல்ஸ் நிறுவனம், ரெளடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.இப்படத்தினை பிரம்மாண்டமாக் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை சென்னையில் நாளை (மார்ச் 6) பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இந்நிலையில், வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதன் வீடியோ வெளியாகி உள்ளது.