முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்...!

saira

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, 'உசுரே நீதான்', 'என்னை இழுக்குதடி' ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
தற்போது, மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிலும், 'விண்வெளி நாயகா' என்கிற இசை வசனம் பெரிதாகக் கவனம் பெற்றுள்ளது.arr
 
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ. ஆர். ரஹ்மானிடம், ‘மன்னிப்பாயா? என யாரிடமாவது நீங்கள் கேட்க வேண்டுமென்றால், அது யார்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான், "எல்லாரிடமும்தான் கேட்க வேண்டும். முக்கியமாக, குடும்பத்தினரிடம். என் மகன், மகள்கள், என் முன்னாள் மனைவி என அனைவரிடமும் மன்னிப்பாயா எனக் கேட்க வேண்டும்." என்றார். ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு தன் கணவரைப் பிரிவதாகக் கடந்தாண்டு தெரிவித்தார். தற்போது, ரஹ்மான் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட்டு இருவரும் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Share this story