ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கு... தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை !

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். கடந்த 2010-ஆம் ஆண்டு மசராட்டி என்ற சொகுசு காரை இத்தாலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் நுழைவு வரி செலுத்தவில்லை என கூறி வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட இந்த சொகுசு காருக்கு 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ருபாய் நுழைவு வரி செலுத்த கூறி வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையத்து அபராதத்துடன் சேர்த்து பணத்தை கட்டும்படி ஹாரிஸ் ஜெயராஜூக்கு மீண்டும் வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.