ராகவா லாரன்ஸ் படத்தை விட்டு வெளியேறிய நயன்தாரா?

ராகவா லாரன்ஸ் படத்தை விட்டு வெளியேறி நயன்தாரா?

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யதாக கூறப்பட்ட நயன்தாரா, படத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே, மேயாத மான் பட இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ராகவா லாரன்ஸ் படத்தை விட்டு வெளியேறி நயன்தாரா?

இந்நிலையில், இந்த படத்தை விட்டு நயன்தாரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், வேறொரு நாயகியை படக்குழு தேடி வருகிறது. மேலும், கதையிலும் சில மாற்றங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Share this story