கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நயன்தாரா?

கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நயன்தாரா?

கொடைக்கானலில் நடைபெறும் மண்ணாங்கட்டி படப்பிடிப்புக்கு நடிகை நயன்தாரா பங்கேற்க மறுப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசை அமைக்க உள்ளார்.

கொடைக்கானலில் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் நயன்தாரா?

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. கொடைக்கானலில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்புக்கு நயன்தாரா வர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானல் காடுகளில் பூச்சிகள் இருப்பதால் அவர் வர மறுப்பதாக தெரிகிறது. இதனால், சென்னையிலேயே காடு போன்று மிக பிரமாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம்.

Share this story