விரைவில் வெளியாகிறது அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் நரேன் !

nirangal moondru

 அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

துருவங்கள் பதினாறு, மாறன் ஆகிய படங்களுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த படத்தில் முன்னணி நடிகராக சரத்குமார், அதர்வா, ரகுமான் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

nirangal moondru

ஐங்கரன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க அதீத திரில்லர் சம்பவங்கள் நிறைந்து உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. 

தற்போது இப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், டப்பிங் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால் விரைவில் டிரெய்லர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

Share this story