தமிழில் வெளியாகும் 'ஆபீசர் ஆன் டூட்டி' திரைப்படம்...!

குஞ்சாகோ போபன் - பிரியாமணி நடித்துக்குள்ள 'ஆபீசர் ஆன் டூட்டி' திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டப் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்படும். மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது தமிழிலும் வெளியாகும். ஆனால், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆபீசர் ஆன் டூட்டி' என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) வெளியாகிறது. இந்த படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ் கிரைம் திரில்லர் படமான இதில் குஞ்சாகோ போபன் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜித்து அஷ்ரப் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.