"ஆபரேஷன் சிந்தூர்: இந்திய இராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்" : நடிகர் கமல்ஹாசன்

kamal

இந்திய இராணுவ நடவடிக்கையை பாராட்டுவதாக நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். 

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிரிக்கப்படாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் மூலோபாய ராணுவ நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.

Share this story