புதிய தொழிலாளர்கள் சங்கம் உருவாக எதிர்ப்பு... சினிமா படப்பிடிப்பு நடைபெறாது என ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

புதிய தொழிலாளர்கள் சங்கம் உருவாக எதிர்ப்பு தெரிவித்து மே 14ஆம் தேதி சினிமா படப்பிடிப்பு நடைபெறாது என ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இருக்கும் போதே புதியதாக ஒரு திரைப்படம் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மே- 14ஆம் தேதி ஒரு நாள் திரைத்துறை சின்னத்திரை படப்பிடிப்புகள் புரொடக்ஷன் பணிகள் நடைபெறாது என ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “2017-ம் ஆண்டு நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தான் பெப்சி சம்மேளனம் கோடிகளில் முன்னேறியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர், ராதாகிருஷ்ணன் பல குற்றச்சாட்டுகளை சொல்லியுள்ளார்.
பெப்சி தொழிலாளர்கள் சொசைட்டி 2010 உருவாகிய பொழுது அதன் வரவு செலவு பூஜியம். ஆனால் இன்று சிறுக சிறுக பணம் சேர்த்து தொழிலாளர்களின் உழைப்பால் ரூ.15 கோடியை சேமித்து வைத்திருக்கிறோம். அரசால் வழங்கப்பட்டிருக்கும் 100 ஏக்கரில், 65 ஏக்கர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இருக்கும் தொழிலாளர்களின் குடியிருப்பு கட்டுவதற்காக, இன்று அரசாணை இருக்கிறது வேறு எந்த புதிய அரசு ஆணையம் போடவில்லை.
பெப்சி சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம், 55 ஆண்டுகள் கடந்து இந்த சம்மேளனம் பயணம் இருந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். புதியதாக சிலர் ஒரு திரைப்படம் தொழிலாளர்கள் சங்கத்தை உருவாக்குகிறார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிப்பதற்காக இந்த தொழிலாளர் அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த கொடுமைக்கு எதிராக 14 - 5 - 25 அன்று புதன்கிழமை அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தவும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்கிறோம்.
அன்றைய தினத்தில் திரைப்படம், சின்னத்திரை, சார்ந்த எந்த படப்பிடிப்பும் நடத்தப்பட மாட்டாது. மேலும் படப்பிடிப்பு மட்டுமில்லாமல், போஸ்ட் புரடோக்ஷன், பிரி ப்ரோடுக்ஷ்ன் நடத்தப்பட மாட்டாது. ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.