‘விரைவில் பா ரஞ்சித்துடன் இணைகிறேன்’ - யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி !

pa ranjith

 விரைவில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 

முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை,  நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரமுடன் கூட்டணி அமைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

pa ranjith

இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் மார்கழியில் மக்களிசை - 2022 என்ற நிகழ்ச்சியை பா ரஞ்சித் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய யுவன் சங்கர் ராஜா, விரைவில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story