பஹல்காம் தாக்குதல்... என் இதயம் துடிக்கிறது.. நடிகை ஆண்ட்ரியா வேதனை...!

anndrea

“தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 3 பேர் உள்ளிட்ட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு, “ பஹல்காமிற்கு நானும் சுற்றுலா பயணியாக சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்கு பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.

நமது நாடு அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசைதிருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை. நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல, ஆனால் இந்த சூழலில் இதை சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை, எனது பதிவின் பின்னுட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

 
 

Share this story