இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெறும் 'பராசக்தி' படப்பிடிப்பு
1741688357328

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கினறனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கை கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.