32 வயதாகும் நடிகையை காதலிக்கும் – 28 வயது ‘பசங்க கிஷோர்', திருமணம் குறித்த தகவல்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியகி ஹிட் ஆன திரைப்படம் ‘பசங்க’. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாதுறையில் அறிமுகமானவர் கிஷோர். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். இதனனை தொடர்ந்து துரோகி, கோலிசோடா, சகா, ஆறு அத்தியாயம், ஹவுஸ் ஓனர், கம்பன் கழகம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தற்போது கிஷோருக்கு 28 வயதாகிறது, இவர் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை காதலித்து வருகிறார். ப்ரீத்தி நடிப்பதை கடந்து மாடல், தொகுப்பாளர் என திகழ்ந்து வருகிறார். இவர் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரி நானும், மற்றும் வானத்தப்போல போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 32 வயதாகும் இவர் தன்னை விட நான்கு வயது சிறியவரான கிஷோரை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கிறார்.
இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை கிஷோர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்