சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’.. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் முக்கிய அறிவிப்பு வெளியீடு

pathuthala

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

pathuthala

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

pathuthala

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. அந்த வகையில் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story