‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு எதிராக அடுத்தடுத்து வழக்கு... சிக்கலில் மாட்டிக் கொண்ட விஜய் ஆண்டனி !.

vijay antony

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு எதிராக அடுத்தடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். 

‘பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று திரையரங்கில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடைக்கோரி மாங்காடு மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜ கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார். 

vijay antony

அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அதற்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் உதவி இயக்குனர் பரணி என்பவர், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலக்கதை தன்னுடையது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாக கூறியிருக்கிறார். அதே கதை தான் பிச்சனை ‘பிச்சைக்காரன் 2’ படமாக உருவாகியுள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கும் வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இரு வழக்குகளும் ஒரே தேதியில் வரவுள்ளது நடிகர் விஜய் ஆண்டனிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story