விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வௌியிட்டுள்ளார். அதில், 

எரிமலை எப்படிப் பொறுக்கும் 
என்ற என் பாடலுக்கு 
உயிர்கொடுத்த கதாநாயகன் 
உயிரிழந்து போனார்

திரையில் நல்லவர் ;
அரசியலில் வல்லவர் 

சினிமாவிலும் அரசியலிலும் 
‘டூப்’ அறியாதவர் 

கலைவாழ்வு பொதுவாழ்வு 
கொடை மூன்றிலும் 
பாசாங்கு இல்லாதவர் 

கலைஞர் ஜெயலலிதா என 
இருபெரும் ஆளுமைகள் 
அரசியல்செய்த காலத்திலேயே 
அரசியலில் குதித்தவர் 

எதிர்க்கட்சித் தலைவர் என்ற 
உயரம் தொட்டவர் 

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாதவரை 
நில்லென்று சொல்லி 
நிறுத்திவிட்டது  காலம் 

வருந்துகிறேன் 

கண்ணீர் விடும் 
குடும்பத்தார்க்கும் 
கதறி அழும் 
கட்சித் தொண்டர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

என வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

Share this story