'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தில் ரசிகர்களை கதைக்குள் அழைத்து செல்லும் முதல் காட்சி சோழ தேசத்தின் வளம், செழிப்பு,மக்கள், நதி என நமது கற்பனையை தூண்டும். அந்த கற்பனை காட்சியை நமது கண்முன்னே கொண்டுவந்தவர் மனிரத்தினம்.
வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியவர் இயக்குநர் மணிரத்தினம், படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்தனர்.
தற்பொழுது படத்தின் முதல் பாடலான ‘பென்னி நதி’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலை ஏ ஆர் ரஹ்மான், ஏ ஆர் ரைஹானஹ், மற்றும் பம்பா பாக்கியா இணைந்து பாடியுள்ளனர்.