பிரம்மாண்ட இசை வெளியீடு... 'பொன்னியின் செல்வன் 2' சூப்பர் அப்டேட் !

maniratnam

 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இருபாகங்களாக உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

maniratnam

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாரான இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. 

இதையடுத்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 29-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

Share this story