ராஜமௌலியின் படத்தில் ‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா

ச்

மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கிவரும் புதிய படத்தில், மந்தாகினி என்ற கதாபாத்திரம் மூலம் இணைகிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் துடிப்பான அதிரடி போஸில் இருப்பதைக் காட்டும் நாடகக் காட்சியுடன் கூடிய ஒரு சினிமா திரைப்பட சுவரொட்டி. அவர் பாயும் மஞ்சள் நிற சேலையை அணிந்து, வலது கையில் துப்பாக்கியை முன்னோக்கி நீட்டியுள்ளார். அவரது தலைமுடி காற்றில் பாய்கிறது, பின்னணியில் பழங்கால இடிபாடுகளுடன் ஒரு பாறை விளிம்பில் நிற்கிறார். வானம் பிரகாசமாக ஒளிக்கதிர்களாலும், கீழே ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பாலும் நிறைந்துள்ளது. உரை மேலடுக்குகளில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பெயரும், நடிகைகள் கீழே பிரியங்கா சோப்ரா ஜோனாஸின் பெயரும், திரைப்படத் தலைப்பு மந்தாகினியின் பெயரும் பெரிய எழுத்துக்களில் உள்ளன.

ஆர்ஆர்ஆர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். இப்படம் காசியின் வரலாற்றை பேசும் படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் நவம்பர் 15 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது. அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிடவுள்ளது. இப்படத்தில் சம்ஹாரி என்ற பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இப்படத்தில் பிருத்திவிராஜ் என்பவரும் நடித்துள்ளார். கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில், மந்தாகினி என்ற கதாபாத்திரம் மூலம் இணைகிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இதனை இயக்குநர் ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Share this story