தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

தெற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகள் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நெல்லை நகர்ப்பகுதியில் மழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு சில நொடிகளில் இடிந்து தரமட்டமானது. மீட்பு பணிகள் அரசு அதிகாரிகள், மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய ரஜினி!

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவ்டடங்களில்  ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் இன்று முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

Share this story