அக்டோபரில் தொடங்கும் ‘தலைவர் 170’... தலைப்பு குறித்து புதிய அப்டேட்

thalaivar 170

ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தின் தலைப்பு குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் 170வது படத்தை 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவுள்ளார். 

rajini

முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது. போலி என்கவுண்ட்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நடிக்கிறார். அதனால் இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் திருவனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க டிஜே ஞானவேல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மலையாள  மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. 

Share this story