சுதந்திர தினத்தில் வெளியாகும் ரஜினியின் ‘ஜெயிலர்’.. ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்

jailer

 ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

jailer

இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பில்  ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

jailer

இந்த படத்தை அடுத்து மாதம்‌ தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது‌. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் வரும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதால் 'ஜெயிலர்' படத்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Share this story