விரைவில் ரஜினி படத்தை தொடங்கும் டிஜே ஞானவேல்.. ‘தலைவர் 170’ பட அப்டேட்

rajini

ரஜினியின் 170வது படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் டிஜே ஞானவேல் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார்.  இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு  ‌தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' படத்தில் அவர் நடித்து வருகிறார்.

rajini

இதையடுத்து 'ஜெய் பீம்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை லைக்கா தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின்  நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

rajini

இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது. அதாவது ‘ஜெய் பீம்‘ படம் போல் இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. போலி என்கவுண்ட்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நடிக்கிறார். அதனால் அந்த பகுதியில் படப்பிடிப்பை நடத்தலாமா என இயக்குனர் டிஜே ஞானவேல் யோசித்து வந்தார். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்தினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. 

அதனால் திருவனந்தபுரம் பகுதியில் செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம். ‘ஜெயிலர்‘ படம் வெளியானதற்கு பிறகு ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Share this story