ரஜினியை பார்த்து கையில் சூடம் ஏற்றி வழிபட்ட ரசிகர்…வீடியோ வைரல்...!

ஜெய்லர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை பார்த்து, ரசிகர் ஒருவர் கையில் சூடம் ஏற்றி வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக கேரள எல்லையான அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் ரசிகர்கள், ரஜினி தங்கி இருக்கக்கூடிய ரிசார்ட் முன்பாக கூடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சூட்டிங் கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார்.
பொன்னான ஊருக்குள்ள
— Binary Post (@BinaryPost001) April 22, 2025
ராஜாவுக்கு ராஜா நீ ...
கொண்டாட எங்களுக்கு
சாமி தந்த சாமி நீ ...
Love You Thalaiva ... #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #Jailer2 @rajinikanth #BinaryPost pic.twitter.com/z47CbAPsbf
இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்து விட்டு அங்கிருந்து சூட்டிங் கிளம்பி சென்றார். தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரஜினி நடிபில் 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.