‘வாங்க… மாப்பிள்ளை வாங்க…….’- அசோக் செல்வனை உற்சாகமாக வரவேற்ற ‘ரம்யா பாண்டியன்’.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சூது கவ்வும்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, பீட்சா 2 வில்லா, மன்மத லீலை, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இன்று பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள இட்டேரியில் உள்ள பண்ணை வீட்டில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனின் சகோதரியான ரம்யா பாண்டியன் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணமக்களுடம் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, தங்கள் குடும்பத்திற்கு புதிதாக வந்திருக்கும் மாப்பிள்ளையை உற்சாகமாக வரவேற்றுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமன வரவேற்பு சென்னையில் நடக்க உள்ளது.
Happy married life my dear Kanmani @iKeerthiPandian ♥️and welcome to our family our dearest Maapilai @AshokSelvan 🤗 pic.twitter.com/dvXXkJe3ma
— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2023