கணவருடன் சேர்ந்து நடிக்கும் ராஷ்மிகா -எந்த படத்தில் தெரியுமா ?
1775781052000
தனது நீண்டநாள் காதலர் விஜய் தேவரகொண்டாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்துகொண்ட ராஷ்மிகா மந்தனா, திருமணத்துக்கு பிறகு கணவருடன் சேர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர்கள் ‘ரணபாலி’ என்ற வரலாற்று படத்தில் நடிக்கின்றனர். ‘புஷ்பா: தி ரைஸ்’, ‘புஷ்பா: தி ரூல்’, ‘அனிமல்’ ஆகிய படங்களுக்கு பிறகு பான் இந்திய நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு உலக அரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக ‘புஷ்பா: தி ரைஸ்’, ‘புஷ்பா: தி ரூல்’ ஆகிய படங்கள் ஜப்பான் மொழியிலும் திரைக்கு வந்தது. இதன்மூலம் அந்த நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த 2024ல் ஜப்பானில் நடந்த அனிமே விருது வழங்கும் விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். இதன்மூலம் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் மற்றும் ஒரே இந்திய பிரதிநிதி என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கரஞ்சிரோல் அனிமே விருதுகள்-2026 என்ற விழாவிலும் பங்கேற்றுள்ளார். இதற்காக ஜப்பான் சென்றார்.
குறிப்பாக ‘புஷ்பா: தி ரைஸ்’, ‘புஷ்பா: தி ரூல்’ ஆகிய படங்கள் ஜப்பான் மொழியிலும் திரைக்கு வந்தது. இதன்மூலம் அந்த நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த 2024ல் ஜப்பானில் நடந்த அனிமே விருது வழங்கும் விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். இதன்மூலம் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் மற்றும் ஒரே இந்திய பிரதிநிதி என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கரஞ்சிரோல் அனிமே விருதுகள்-2026 என்ற விழாவிலும் பங்கேற்றுள்ளார். இதற்காக ஜப்பான் சென்றார்.

