டாடா பட வாய்ப்பை தவறவிட்ட ராக்ஸ்டார் அனிருத்

டாடா பட வாய்ப்பை தவறவிட்ட ராக்ஸ்டார் அனிருத்

சினிமா குடும்ப பின்னணியை கொண்டவர் அனிருத், அதனாலேயே சினிமா மீதான ஆர்வம் அவரை தொற்றிக்கொண்டது. பள்ளி காலத்திலேயே இசைக்குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அனிருத், லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த கையோடு லண்டன் ட்ரினிட்டி இசை கல்லூரியில் பியானோ இசை மற்றும் சவுண்ட் இன்சினியர் படிப்பையும் முடித்தார். அதுமட்டுமலாமல் கார்நாடக இசையையும் முறையாக கற்றுள்ளார். தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து கோலிவுட்டின் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ‘ராக் ஸ்டாராக’  உருவெடுத்தார்.

டாடா பட வாய்ப்பை தவறவிட்ட ராக்ஸ்டார் அனிருத்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய டாடா பட இயக்குநர் கணேஷ் பாபு, டாடா திரைப்படத்தின் கதையை எழுதியபோது, மனதில் அனிருத்தை வைத்துக் கொண்டு தான் எழுதியதாக கூறி இருக்கிறார். 

Share this story