வெளிநாட்டில் ரகசிய திருமணம்... காதலனை கரம்பிடித்த 'ரோஜா' சீரியல் நடிகை !

priyanka nalkari

'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, தனது நீண்ட காதலனை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 

priyanka nalkari

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. ஐதராபாத்தை சேர்ந்த அவர், தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக மாறினார்.‌ கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவுபெற்றது. அந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளை கவர்ந்தார். 

priyanka nalkari

அந்த சீரியல் நிறைவுபெற்றதை அடுத்து ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் 'சீதாராமன்' சீரியலில் தற்போது நடித்து வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன்னர் சினிமாவில் தான் முதல்முதலில் கால்தடம் பதித்தார். தெலுங்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'அந்தரி பந்துவயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் சில படங்கள் நடித்த அவர், தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரே,. சம்திங் சம்திங், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

priyanka nalkari

இதற்கிடையே தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை சில ஆண்டுகளாக பிரியங்கா நல்காரி காதலித்து வந்தார். இந்நிலையில் மலேசியா முருகன் கோயில் திடீரென ராகுல் வர்மாவை ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். அவர்களது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா நல்காரி, பல சிக்கல்களை தாண்டி திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். 

priyanka nalkari

Share this story