தல அஜித்தை தொடர்ந்து, பைக்குடன் இமயமலைக்கு பயணம் செய்த விஜய்யின் தந்தை…..
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் .ஏ. சந்திரசேகர் தற்பொழுது இமையமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர்,தயாரிப்பாளர்,எழுத்தாளார்,நடிகர் என பண்முக திறமை கொண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர் விஜயின் தந்தையான இவர் 1981ல் வெளிவந்த “சட்டம் ஒரு இருட்டறை” படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்.
தனது திரைத்துறை பயணத்தில் நடிகர் விஜயகாந்தை வைத்து பல வெற்றிபடங்கள் கொடுத்தாலும் ,விஜயை நடிகராக களம் இறக்கிய “நாளைய தீர்ப்பு” எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருந்த போதிலும் மனம் தளராமல் தனது மகனை வைத்து பல படங்களை இயக்கினார்.அதில் செந்தூரபாண்டி’ திருப்புமுனையாக அமைய அடுத்தடுத்து சாக்லேட் பாய் கதாபத்திரத்தில் நடித்து ,ஆக்க்ஷன் ஹிரோவாக உருவெடுத்தார் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய்-க்கு மிகபெரிய ரசிகர் பட்டாளாமே உள்ளது.
#Himalayas pic.twitter.com/tSay0qk3w5
— S A Chandrasekhar (@Dir_SAC) November 1, 2022
இந்தநிலையில் புதிய கட்சி தொடங்குவதில் தந்தைக்கும்,மகனுக்கும் இடையே மோதல் தொடங்கி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது இருவரும் பேசிகொள்ளாத நிலை உள்ளது.எஸ்.ஏ.சி –ஷோபா சஷ்டியப்தபூர்த்தி, திருமண நாளுக்கு கூட விஜய் கலந்துகொண்டதாக தெரியவில்லை.இந்தநிலையில் தனது மகன் பழையமாதிரி ஒருமுறையேனும் பேசிவிட மாட்டானா! என ஏக்கத்தில் உள்ளார் எஸ்.ஏ.சி. தொடர்ந்து அவர் புனித யாத்திரை பயணமாக காசி சென்றிருந்தார். அந்த வகையில் தற்பொழுது இமையமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பைக்கில் சாய்ந்தவாரு அவர் போஸ் கொடுத்து, புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.