சென்சாரில் சான்று பெற்ற சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம்..

yashoda

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட  ஆக்‌ஷன்  மற்றும் எமோஷனல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘யசோதா’. இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டுள்ள இந்தப்படத்தில்  சமந்தா நடித்திருக்கிறார். இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்பது  படத்தின் ட்ரைய்லர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது.  சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்புப் பணிகள் மற்றும் கதைக்கு வலுவூட்டும் வகையிலான பின்னணி இசை ஆகியவை எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

yashoda

 இயக்குநர்கள்   ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில்  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில்  பான் இந்தியா படமாக ‘யசோதா’ உருவாகியிருக்கிறது. இந்தப்படம்  உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.  உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் கூட சினிமா மீது நடிகை சமந்தா காட்டும் அர்ப்பணிப்பு,  உலகம் முழுவது இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.

yashoda

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும்  சமந்தா விரைவில் நலம்பெற்று,  நல்ல உடல்நலனுடன் வலிமையாக திரும்பி வர வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர். அதிக எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் இந்தப் படம் தற்போது சென்சாரில்  யூ/ஏ சான்றிதழ்  பெற்றுள்ளது.    பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வெளியாக இருக்கக் கூடிய,  கதாநாயகியை மையப்படுத்திய முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story