பருத்திவீரன் விவகாரத்தில் கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - சமுத்திரக்கனி

பருத்திவீரன் விவகாரத்தில் கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை -  சமுத்திரக்கனி

பருத்திவீரன் பிரச்சனை சில நாட்களாக உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பருத்திவீரன் விவகாரத்தில் கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை -  சமுத்திரக்கனி

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், ரொம்ப பெரிய தவறு செய்துள்ளீர்கள் என்றும், நன்றி இல்லாமல் பேசியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க என கண்டித்து இருக்கிறார். களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் விவகாரத்தில் கார்த்தி அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை -  சமுத்திரக்கனி
 

Share this story